2 பேரை தாக்கிய புலி சடலமாக மீட்பு

65பார்த்தது
2 பேரை தாக்கிய புலி சடலமாக மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே சேனங்காட்டில் தோட்ட தொழிலாளியையும், வாகனத்தில் சென்றவரையும் தாக்கிவிட்டு ரப்பர் தோட்டத்திற்குள் புகுந்த புலி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. புலியின் உடல் முழுவதும் முள்ளம்பன்றியின் முட்கள் இருந்ததால், முள்ளம்பன்றியை வேட்டையாட முயன்றபோது புலி இறந்ததா? என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். புலி தாக்குதலில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி