குழந்தைக்கு கெட்டுப்போன சப்பாத்தி கொடுத்த ஹோட்டல் முற்றுகை

66பார்த்தது
ஈரோடு மாவட்டம் காளைமாடு சிலை அருகே இயங்கி வரும் தனியார் ஹோட்டலுக்கு இன்று சென்ற தம்பதி தங்களது குழந்தைக்கு சப்பாத்தி வாங்கியுள்ளனர். அதனை, நுகர்ந்து பார்த்தபோது சப்பாத்தி கெட்டுப்போய் இருந்தது தெரியவந்தது. இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் இதுகுறித்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கடையில் இருந்தவர்கள் ஷட்டரை மூடி தப்ப முயன்றனர். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று ஊழியர்களை மடக்கி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி