காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு! புலம்பும் மக்கள் (Video)

82பார்த்தது
கோடை காலம் முடிவடைந்த நிலையிலும் போதிய மழை பெய்யாததால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் விலைகள் அதிகரித்து காணப்படுவது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மார்க்கெட்டுக்கு வந்தவர்கள் கூறும் போது, “ரூ.50க்கு குறைவாக இங்கு எதுவுமே இல்லை, வேண்டுமென்றால் வாங்கிக்கொள்ளுங்கள் இல்லையேல் செல்லுங்கள் என வியாபாரிகள் கூறுகின்றனர். தக்காளி கிலோ ரூ.80க்கு விற்பனையாகிறது. இது மேலும் விலையேறுமே தவிர குறையாது என வியாபாரிகள் சொல்வதாக” கூறுகின்றனர்.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி