மக்களவையில் 2 ஆவது நாளாக இன்று(ஜூன் 25) தமிழக எம்பிக்கள் பதவியேற்றனர். அப்போது, கோவை திமுக எம்பி கணபதி ராஜ்குமாரின் பெயரை படித்ததும், தமிழக எம்பிக்கள் கைதட்டினார். அப்போது யாரோ ஒருவர், "ஏம்ப்பா அண்ணாமலையையே தோற்கடிச்சவர்பா நல்லா கைதட்டுங்கள்" என்றார். அந்த அவையில் இரு முறை அண்ணாமலையின் பெயர் உச்சரிக்கப்பட்டது. பின்னர் மேடைக்கு சென்ற கணபதி ராஜ்குமார், தற்காலிக சபாநாயகரை பார்த்து shall i start sir? என கேட்டு தொடங்கினார்.