லடாக் மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற ஹனிஃபா ஜேன், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவை நேரில் சந்தித்து தனது ஆதரவை வழங்கினார். இதன் மூலம் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் எண்ணிக்கை 237 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், மேலும் சில சுயேச்சை உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.