கட்சியைக் காப்பாற்றுவதே முக்கியம் - ஓபிஎஸ்

82பார்த்தது
கட்சியைக் காப்பாற்றுவதே முக்கியம் - ஓபிஎஸ்
கட்சியைக் கைப்பற்றுவதை விட காப்பாற்றுவதே முக்கியம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அதிமுக என்ற கட்சியை கைப்பற்றுவதை விட காப்பாற்றுவதே முக்கியம். இந்த பெருந்தன்மையான முடிவை அனைவரும் கூடி எடுக்க வேண்டும். கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என்ற சுயநலத்தோடு சிந்திக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியடைந்தது. இந்த நிலையில், கட்சிக்குள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற குரல் எழும்பி வருகிறது.

தொடர்புடைய செய்தி