புனேவில் தொடரும் சோகம்.. அதி பயங்கர விபத்து!

10721பார்த்தது
மகாராஷ்டிராவின் புனே மாவட்டம் அருகே பிம்ப்ரி-சின்ச்வாட்டி நகரில் சாலையை கடந்து சென்ற பெண்ணை அதிவேகமாக வந்த கார் இடித்து தூக்கியெறிந்துவிட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான சந்திப்பில் மக்கள் சாலையை கடந்து சென்று கொண்டிருந்த போது, போலீஸ்காரரின் மகனான வினய் விலாஸ் நாயக்கரே என்பவர் அதிக வேகத்தில் சென்று பெண்ணை இடித்து கீழே தள்ளினார். பலத்த காயங்களுடன் அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த பயங்கர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி வீடியோ: பிடிஐ

தொடர்புடைய செய்தி