இளைஞரை கடித்துக் கொன்ற முதலை

571பார்த்தது
இளைஞரை கடித்துக் கொன்ற முதலை
முதலை தாக்கி இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த நிமாய் மல்லிக் (34) என்பவர் காலை 8.30 மணியளவில், தனது வயலுக்கு வாளி மூலம் தண்ணீர் எடுத்து ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் இருந்து வந்த முதலை ஒன்று, அவரை கடித்து ஆற்றுக்குள் இழுத்துச் சென்றது. சில மணி நேரங்களுக்குப் பிறகு, தண்ணீரில் மிதந்த பாதி உடலை தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளனர். அவரது மரணம் கிராமம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.