8 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கிய முதலமைச்சர்!

79பார்த்தது
8 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கிய முதலமைச்சர்!
உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்று, கல்வி பயிலவிருக்கும் 8 மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களை பாராட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடிக்கணினிகளை வழங்கினார். இன்று (ஜுலை 19) சென்னை தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, சென்னை, ஐஐடி, திருச்சி என்ஐடி, தரமணி என்ஐஎப்டி ஆகிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பு பெற்றுள்ள 8 மாணாக்கர்களுக்கு முதலமைச்சர் மடிக்கணினிகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி