ட்ரீட் கொடுக்காத சிறுவன் கொலை

54பார்த்தது
ட்ரீட் கொடுக்காத சிறுவன் கொலை
கிழக்கு டெல்லி மாகாணம் ஷகர்பூர் பகுதியில் 9ம் வகுப்பு படிக்கும் சிறுவன் சச்சின் (16) புதியதாக ஸ்மார்ட்போன் வாங்கியுள்ளார். சச்சின் ஸ்மார்ட்போன் வாங்கியதற்கு தனது 3 நண்பர்கள் டிரீட் கேட்டுள்ளனர். அவர்களுக்கு சச்சின் டிரீட் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 நண்பர்கள் சச்சினை கத்தியால் குத்தியுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சச்சின் உயிரிழந்துள்ளார். கொலை செய்த 3 சிறுவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி