பூதலூர் அருகே டாட்டா ஏசி கவிழ்ந்து 30 பேர் காயம்

79பார்த்தது
பூதலூர் அருகே டாட்டா ஏசி கவிழ்ந்து 30 பேர் காயம்
பூதலூர் அருகே டாட்டா ஏசி கவிழ்ந்து 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
பூதலூர் அருகே வில்வராயன்பட்டியைச் சேர்ந்த மக்கள் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் கோவிலுக்கு சென்று விட்டு நேற்று மாலை டாட்டா ஏசியில் வந்து கொண்டிருக்கும் பொழுது அயனாவரத்தில் இருந்து பூதலூர் வரும் வழியில் எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்தில் உள்ள வாய்க்காலில் டாட்டா ஏசி கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த வில்வராயன் பட்டியைச் சேர்ந்த கல்யாணி, ராஜேஸ்வரி, வினோத், உஷாராணி, சுப்புலட்சுமி, ரவிச்சந்திரன், விஜயா, பழனியம்மாள், முத்தமிழ்செல்வி, சந்தானகிருஷ்ணன், கார்த்திக் சர்மா, சித்ரா, ரித்திக் ரோஷன், நிவேதா, தாமரைச்செல்வி, பழனிச்சாமி உட்பட 30 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை உடனடியாக பூதலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் பத்துக்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பட விளக்கம் பூதலூர் அரசு ஆஸ்பத்திரியில் படுகாயம் அடைந்தவர்களுக்கு டாக்டர் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி