திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை

63பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இன்று மதியம் வரை நல்ல வெயில் அடித்து வந்த நிலையில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதை தொடர்ந்து காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையினால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். வெயிலின் தாக்கம் சற்று குறைந்ததாகவும் தெரிவித்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி