இந்தியா கூட்டணி- கட்சியினர் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டனர்

76பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி 14வது வார்டு பகுதிகளில் திமுக மாவட்ட துணைச் செயலாளரும், பேரூராட்சி
வார்டு உறுப்பினருமான
துரைமுருகன் ஏற்பாட்டில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி  சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வழக்கறிஞர் சுதா அவர்களுக்கு வாக்கு கேட்டு இல்லம் தோறும் சென்று வாக்காளர்கள் இடத்தில் துண்டு பிரசுரம் வழங்கி  கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என
கேட்டனர், மேலும் புனித செபஸ்தியார் ஆலயத்தில் வழிபாட்டிற்கு வந்திருந்தவர்களிடத்திலும் வாக்கு கேட்டனர். பங்குத்தந்தை  அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து வாக்கு கேட்டனர்.
இந்நிகழ்வுகளில் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட துணைச் செயலாளர் கோவி. அய்யாராசு, நகரச் செயலாளர் கபிலன், பேரூராட்சி மன்ற தலைவர் பூங்குழலி கபிலன்,
காங்கிரஸ் கட்சி சார்பு அணி மாநில பொறுப்பாளரும், பேரூராட்சி துணை தலைவருமான பூபதிராஜா, நகர தலைவர் பாலாஜி,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாமு. தர்மராஜன், ஏ ஐ டி யு சி மாநில செயலாளர் தில்லைவனம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் முரளிதரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர் யோவான், உட்பட இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் மாவட்ட, நகர, கிளை பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்துகொண்டு வாக்காளர்களிடம் வாக்கு கேட்டனர்.

தொடர்புடைய செய்தி