வேலூர், நெல்லைக்கு தலா 1, 250 டன் அரிசி அனுப்பி வைப்பு

67பார்த்தது
வேலூர், நெல்லைக்கு தலா 1, 250 டன் அரிசி அனுப்பி வைப்பு
தஞ்சாவூரில் இருந்து பொது விநியோகத் திட்டத்திற்காக வேலூர், திருநெல்வேலிக்கு தலா 1, 25 டன் அரிசி சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவை மில்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர் அரிசி, பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

அதன்படி நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல் வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2, 500 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சரக்கு ரயில்கள் மூலம் வேலூர் மற்றும் திருநெல்வேலிக்கு தலா 1, 250 டன் புழுங்கல் அரிசி தலா 21 வேகன்களில் பொது வினியோகத் திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை ரயில் வேகனில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி