திருச்சிற்றம்பலம் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

71பார்த்தது
புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருச்சிற்றம்பலத்தில் புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தனியார் பார்மசி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தை பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாஸ்கர் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பார்மசி கல்லூரி முதல்வர் அன்பழகன் வரவேற்றார். தொடர்ந்து, பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் மதிவாணன் புகையிலைக்கு எதிரான உறுதி மொழியை வாசிக்க கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் டிஎஸ்பி பாஸ்கர், திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன், புதுக்கோட்டை பாரத வங்கி கிளை மேலாளர் ராம்குமார், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி