பட்டுக்கோட்டையில் திமுக மருத்துவர் அணி மருத்துவ முகாம்

59பார்த்தது
பட்டுக்கோட்டையில் திமுக மருத்துவர் அணி மருத்துவ முகாம்
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
நிகழ்ச்சிக்கு, பட்டுக்கோட்டை நகர் மன்றத் தலைவர் சண்முகப்பிரியா செந்தில் குமார் தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா. அண்ணாதுரை முகாமைத் துவக்கி வைத்தார். தலைமை செயற்குழு உறுப்பினரும், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினருமான  நா. அசோக்குமார், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளரும், தஞ்சை மாநகராட்சி துணை மேயருமான அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னதாக மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் வி. சௌந்தர்ராஜன் வரவேற்றார். மாவட்ட மருத்துவர் அணி தலைவர் குணசேகரன் நன்றி கூறினார்.  இதில், தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை, தஞ்சாவூர் கேன்சர் மருத்துவமனை, தஞ்சாவூர் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, பட்டுக்கோட்டை கனகேசத் தேவர் நினைவு மருத்துவமனை, நாடி மருத்துவமனை, திராவிடன் மருத்துவமனையைச் சேர்ந்த பல்வேறு துறை சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு 1, 258 பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.  நிகழ்ச்சியில், மருத்துவர் அணி மற்றும் திமுக பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி