பேராவூரணி போராட்டம் நடத்திய பாஜகவினர் 100 பேர் கைது

75பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும் அதனை கண்டித்து தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மார்ச் 17 இல் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேருந்து நிலையம் முகப்பு வாயிலில் மாலை ஆறு முப்பது மணிக்கு பாஜகவினர் மாநில விவசாய அணி துணைத்தலைவர் பண்ணவயல் இளங்கோ தலைமையிலும், பாஜக மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ், மாவட்ட பொதுச் செயலாளர் வீரா, மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டாஸ்மாக் ஊழல் முறைகளை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மாநில தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும், எனவும் கைது செய்ததை கண்டித்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்து நிலையத்தில் இருந்து வாகனங்கள் வெளியே செல்ல முடியாமலும் பேருந்து நிலையத்திற்கு வாகனம் செல்ல முடியாமலும் அறந்தாங்கி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அடுத்து போராட்டம் நடத்திய நூற்றுக்கும் மேற்பட்ட பாலாஜி பாஜகவினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி