பட்டுக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் ராஜகோபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -பட்டுக்கோட்டை கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. தஞ்சாவூர் மின்பகிர்மான வட்டமேற்பார்வை பொறியாளர் விமலா தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், பேராவூரணி மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை எடுத்துக்கூறி தீர்வு பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.