பயனாளிகளுக்கு ரூ. 10. 34 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

65பார்த்தது
பயனாளிகளுக்கு ரூ. 10. 34 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
பட்டுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை கோட்ட அளவில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் கா. அண்ணாத்துரை மற்றும் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் என். அசோக் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

நிழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் விலையில்லா வீட்டு மனைப்பட்டா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தையல் இயந்திரம், காதொலிக்கருவி, கைப்பேசி என 315 பயனாளிகளுக்கு ரூ. 10 லட் சத்து 34 ஆயிரத்து 772 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அ. அக்பர் அலி, பட்டுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் த. சுகுமார், பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் தெய்வானை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி