வாகன சோதனையில் ரூ 3 லட்சத்து 69 ஆயிரம் பணம் பறிமுதல்

73பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் திருக்கருக்காவூரிலிருந்து திட்டை செல்லும் சாலையில் பறக்கும் படை அதிகாரி வீரமணி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவலூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் மகன் ரவிக்குமார் என்பவரின் இரு சக்கர  வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ. 3, 69, 000 பணம் எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படையினரால் கைப்பற்றபட்ட பணத்தை பாபநாசம் வட்ட அலுவலகத்தில் பாபநாசம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன், பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். உடன் மண்டல துணை வட்டாட்சியர் தமயந்தி, உதவியாளர் அருணா ராணி, காவலர் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி