தஞ்சை: கர்ப்பிணியை நடுரோட்டில் இறக்கிவிட்ட நடத்துனர் - வைரல் வீடியோ

1552பார்த்தது
தஞ்சாவூரில் இருந்து ராஜகிரி செல்வதற்காக தனியார் பேருந்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஏறியுள்ளார். பாதி தூரம் சென்றவுடன் பஸ் கண்டக்டர் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்ட கர்ப்பிணி பெண்ணிடம், சில்லறை வேண்டும் எனக் கூறி கண்டக்டர் பாதி வழியில் நிறுத்தி அவரை பசுபதிகோவில் என்ற இடத்தில் இறக்கி விட்டுள்ளார்.

பஸ்ஸில் ஏறும்போதே சில்லறை இருக்கா என கேட்காமல் பஸ்ஸில் ஏறி டிக்கெட் கேட்கும்போது சில்லறை இல்லாத காரணத்தினால் கீழே இறக்கி விடுவது போன்று அடாவடி சம்பவத்தில் தனியார் பேருந்து கண்டக்டர்கள் செயல்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி