மாலாபுரம் நல்லமுத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

78பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கோபுராஜபுரம் ஊராட்சி மாலாபுரம் நல்ல முத்து மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  
அது சமயம் வேப்பங்குளம் அய்யனார் கோவிலிலிருந்து பால்குடம், காவடி,   பறவை காவடி, பாடை காவடி, குழந்தை  தொட்டில் எடுத்து காவடி, தப்பாட்டம் ஆகியவற்றுடன் பக்தர்கள் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக  கோவிலை வந்தடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாலாபுரம் கிராமவாசிகள், நாட்டாமை பஞ்சாயத்தார்கள், மகளிர் குழுக்கள், இளைஞர் அணி செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி