சரபோஜிராஜபுரம் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

1905பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, சரபோஜிராஜபுரம் ஊராட்சி  வெள்ளாளர் தெருவில் அமைந்திருக்கும் திரெளபதி அம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அது சமயம் குடமுருட்டி ஆற்றில் இருந்து இன்னிசை முழங்க வான வேடிக்கையுடன் அம்மன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது பின்னர் கோவில் முன்பு அமைந்துள்ள அக்னி குண்டத்தில்  திரளான பக்தர்கள்  தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது.   திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை சரபோஜிராஜபுரம் கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி