கிங் மேக்கர் பவுண்டேஷன் சார்பில் இரத்ததான முகாம்

77பார்த்தது
பாபநாசத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு  கிங்மேக்கர் வெல்பேர் பவுண்டேஷன் தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதாரர் மருத்துவமனை இணைந்து நடத்தும் இரத்ததானம் முகாம்
ஊராட்சி ஒன்றி நடுநிலை பள்ளியில் நடைபெற்றது.
முகாமிற்கு வாலியா வணிக குழும தலைவரும், நகர் மன்ற உறுப்பினரும்,
இராமநாதபுரம்
பி ஆர் என் இராஜாராம் பாண்டியன் கோபால் தலைமை வகித்து இரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன், கும்பகோணம் இந்தியன் ரெட் கிராஸ் துணைத் தலைவர் ரோசாரியோ ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.  
தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதாரர் மருத்துவமனை மருத்துவர்கள் சிந்தியா, விஸ்வாநாகராஜ், ஆலோசகர் புனிதா உள்ளிட்ட மருத்துவ குழுவினர்கள்
கொடையாளிகளிடம் இரத்தம் சேகரித்தனர்.
இம் முகாமில் 40க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர். இரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்  மற்றும் தென்னங்கன்று வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் ரோட்டரி சங்கத்தினர், தஞ்சாவூர் நேரு யுவகேந்திரா, கும்பகோணம் இந்தியன் ரெட் கிராஸ், பாபநாசம் கிங் மேக்கர் வெல்வர் பவுண்டேஷன் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இம் முகாமிற்கான ஏற்பாடுகளை கிங் மேக்கர் வெல்பர் பவுண்டேஷன் பார்த்திபன், மணிவண்ணன் உட்பட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி