சிபிஐ கட்சி சார்பில் போராட்டம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

79பார்த்தது
தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 
சார்பில்  காவல்துறை அதிகாரி மற்றும் காவல் ஆய்வாளர் கந்து வட்டிக்காரர்களுக்கு துணை போய் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருவததை கண்டித்து பாபநாசம் அண்ணா சிலையிலிருந்து காவல் நிலையம் சென்று முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் அண்ணா சிலையில் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மேல வீதியில் திரண்டு இருந்தனர்.
மாவட்டச் செயலாளர் மு அ பாரதி தலைமையில் திரண்டு இருந்த போராட்ட குழுவினரிடம்
பாபநாசம் காவல் துறை துணை கண்காணிப்பாளர்  பேச்சுவார்த்தை நடத்தினார்.   இதில் சுமூகத்தீர்வு ஏற்பட்டு நடைபெற இருந்த போராட்டம் கைவிடப்பட்டது.
ஒன்றிய செயலாளர் பொன். சேகர்,   மாவட்ட துணைச் செயலாளர் ஆர். செந்தில்குமார், ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் ஆர். தில்லைவனம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாமு. தர்மராஜன் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் மகளிர் அணியினர் உட்பட மாவட்ட நகர கிளை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி