மோட்டார் சைக்கிள் மோதல் 5 பேர் படுகாயம்- சிசிடிவி காட்சி

1116பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கபிஸ்தலம் முதலியார் தெருவில் வசித்து வருவர் மார்ட்டின் அலெக்சாண்டர் வயது 42 இவர் பாபநாசத்தில் தனியார் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இவர் பாபநாசம் பழைய பேருந்து நிலையத்தில் ரோட்டை கடந்து டீ குடிபதற்க்காக நடந்து செல்கிறார் அப்போது தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஆரன் ஆடிக்காமலும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் மார்ட்டின் மீது மோதி அதே சாலையில்  வந்த இரண்டு மோட்டார் சைக்கிள் மீதும் மோதி அடுத்தடுத்து விபத்துக்களை ஏற்படுத்தினார்.

இந்த விபத்தில் மார்ட்டின் அலெக்சாண்டர் மோட்டார் சைக்கிளில்ஓட்டி வந்தவர்களான கபிஸ்தலம் சந்திரசேகரன் வயது 40, இராஜகிரி சாகுல் ஹமீதுவயது 19 , பண்டாரவாடை முகம்மது தவ்ஹீத் வயது 22  மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தை ஏற்படுத்திய கச்சபத்து அஜய் வயது 20 ஆகியோர் பலத்த படுகாயம் அடைந்து பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில்  அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து மார்ட்டின் அலெக்சாண்டர் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி