புனித தாமஸ் தொடக்கபள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்

58பார்த்தது
புனித தாமஸ் தொடக்கபள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்
பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் திருவையாத்துக்குடி ஊராட்சியில் அமைந்துள்ள புனித தாமஸ் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் அம்மாபேட்டை ஒன்றியக் குழு பெருந்தலைவர்
கேவீ. கலைச்செல்வன், துணைப் பெருந்தலைவர் தங்கமணி சுரேஷ் குமார், திருவையாத்துக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா தர்மராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள் முன்னிலையில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு சக்கரைப் பொங்கல் வழங்கி
காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி