கும்பகோணத்தில் தேர்தல் அதிமுக அலுவலகம் திறப்பு விழா

75பார்த்தது
குடியுரிமை சட்ட திருத்தம் எனும் சிஏஏ சட்டத்தை அதிமுக ஆதரித்தது என்பது எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதல் இன்றி
ஓ பன்னீர்செல்வம் தன்னிச்சையாக எடுத்த முடிவு என அதிமுகவின் அமைப்புச் செயலாளர் ஓ எஸ் மணியன் இன்று கும்பகோணத்தில் அதிமுக தேர்தல் பணிமனையை திறந்து வைத்த போது தெரிவித்தார்.


மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கும்பகோணத்தில் அதிமுக தேர்தல் பணிமனையை அதன் அமைப்பு செயலாளர் ஓ எஸ் மணியன் நேற்று திறந்து வைத்தார். அப்போது பேசிய ஓ. எஸ். மணியன்,

அதிமுகவில் இரட்டை தலைமை இருந்தபோது நாடாளுமன்றத்தில் சிஏஏ சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது ஓ பன்னீர்செல்வம் தனது மகன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சமயம் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக முடிவெடுத்து சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தான் அதிமுகவிற்கு இரட்டை தலைமை வேண்டாம் ஒற்றை தலைமை வேண்டும் என முடிவு செய்யப்பட்டு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் சிஏஏ சட்டம் வருவதற்கு ஓபிஎஸ் தான் காரணம் என்றும் ஓ எஸ் மணியன் தெரிவித்தார்.
மேலும் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இனி எந்த காலத்திலும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றும் ஓஎஸ் மணியன் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி