தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் பக்ரீத் தொழுகை

80பார்த்தது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலைக் காவேரி கிளையின் சார்பாக தியாகத் திருநாள் (ஈதுல் அல்ஹா) தொழுகை திடலில் நடைபெற்றது இதில் மாநில பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு
பெருநாள் உரையாற்றினார்கள் தொழுகைக்கு பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கீழ்கண்டவாறு சகோ. முஜிபுர் ரஹ்மான் பேசினார்
1. இப்ராஹிம் நபி அவர்களின் வாழ்க்கையில் அவர் செய்த தியாகங்கள் தான் இந்த பெருநாளின் பல்வேறு நிகழ்வுகளிலும் ஹஜ் பிரயாணத்திலும் பிரதிபலிக்கிறது , எனவே நபி இப்ராஹிம் (அலை) அவர்களைப் போன்று கொள்கை உறுதியோடு வாழ்வதற்கு உறுதி ஏற்க வேண்டும் , இப்பெருநாளின் ஒரு அங்கமாக குர்பானி பிராணியின் இறைச்சியை ஏழை எளிய மக்களுக்கும், சொந்த பந்தங்களும் வழங்கி இஸ்லாமியர்கள் மகிழ்வுறுகின்றனர் என்றும் பேசினார்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஷாகுல் கிளை செயலாளர் இலியாஸ் பொருளாளர் ஆசாத் துணை செயலாளர் காதர் சுல்தான் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி