ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது

73பார்த்தது
ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது
சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் சார்பில் ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் வல்லப கணபதி சன்னதியில் இருந்து துவங்கியது. திருக்கயிலாய பரம்பரை சொர்ணபீடம் ஸ்ரீலஸ்ரீ சொர்க்கபுர ஆதீனம் நிர்வாக ஸ்ரீ காரியம் ஓம் வீரப்பிள்ளை தேசிக தம்புரான் சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
திருபுவனம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவலிங்கம், கீவளூர் பேரூராட்சி செயல் அலுவலர் குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கிரிவலத்தில் சிவத்திரு. திருவருட்செம்மல் இறைநெறி இமயவன் வழிகாட்டுதலுடன் கூட்டு வழிபாடு மற்றும் கிரிவலமும் நடைபெற்றது. சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் நிர்வாகி கேசவராஜன், மேனேஜிங் டிரஸ்டி சிவசங்கரன், செயலாளர் சேகர், பொருளாளர் சுவாமிநாதன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சென்னை ஐஓபி முதுநிலை மேலாளர் ஓய்வு ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் அமுது வழங்கினர்.

தொடர்புடைய செய்தி