மதுரை எய்ம்ஸ் நிர்வாக கட்டுமான பணிகள் நடைபெறவில்லை என செய்திகள் வெளியானதற்கு மறுப்பு தெரிவித்து மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எய்ம்ஸ் மதுரை திட்டத்தின் முன்னேற்றம் குறித்து பல்வேறு சமூக வலைதளங்கள் தவறான தகவல்களை பரப்பி வருவதும், அதை அரசியல் உள்நோக்கத்துடன் தொடர்புபடுத்துவதும் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்தத் தவறான தகவல்களும் பொய்ப் பிரச்சாரங்களும் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதையும், ஆரோக்கியமற்ற மற்றும் தவறாக வழிநடத்தும் தவறான கதைகளைப் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டதாகத் தோன்றுகிறது” என கூறப்பட்டுள்ளது.