நெல்லை மாவட்டத்தில் இருந்து பாபநாசம் கூட்டு குடிநீர் தண்ணீர் தென்காசி மாவட்டம் கடையம், மாதாபுரம், பொட்டல் புதூர் வழியாக தென்காசி, செங்கோட்டை நகரங்களுக்கு நாள்தோறும் விநியோகம் செய்யபட்டு வருகிறது.
இந்த நிலையில் மாதாபுரத்தில் செல்லும் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.
இதனை சரி செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.