கடையம் வடக்கு ஒன்றியம், மைலப்பபுரத்தில் ஏழு நண்பர்கள் குழு சார்பில் நேற்று கபடி போட்டி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ. சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊர் தலைவர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் சுதா, ஒன்றிய கவுன்சிலர் சங்கர், கிளை திமுக செயலாளர் சுப்பிரமணியன், தங்கராஜ், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், முன்னாள் பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கபில் தேவதாஸ்,
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் உள்ளனர்.