சமுதாய நலக்கூடத்தை திறக்க கோரிக்கை

57பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏமன்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் பூட்டியே உள்ள சமுதாய நலக்கூடத்தை திறக்கும் பட்சத்தில் சுப காரியங்கள் அனைத்தையும் நடத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என்ற அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்தி