தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

77பார்த்தது
தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று (செப்.16) மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிட மிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். 296 மனுக்கள் பெறப்பட்டது. 11 பயனாளி களுக்கு புதிய குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம் , மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் அமிர்தலிங்கம் , மாவட்ட துணை ஆட்சியர் ஷேக் அயூப், மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி