தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீட்டர் சாலையில் அமைந்துள்ள தென்காசி வடக்கு மாவட்ட
திமுக அலுவலகத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் மாவட்ட அமைப்பாளர் பிச்சையா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வருகின்ற 06. 01. 2024 அன்று சென்னையில் நடைபெறவுள்ள தென்மண்டல வழக்கறிஞரணி பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் துணை அமைப்பாளர் அருணாசலம் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.