தேனீர் கடைக்குள் புகுந்த கார்-பரபரப்பு

2615பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து வாடகை கார் ஒன்றை எடுத்து பகுதி நேர ஓட்டுனராக காரை சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி வரை சென்ற ஓட்டுநர் மாடசாமி சண்முகநல்லூர் அருகே சென்ற போது திடீரென தறிக்கட்டு ஓடிய நிலையில் சாலையோரம் உள்ள தேநீர் கடைக்குள் புகுந்த நிலையில் அங்கு தேநீர் பருகி கொண்டிருந்த இருவர் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது.

இந்த நிலையில் அங்கு தேனீர் அருந்திக்கொண்டிருந்த மேலநீலிதநல்லூர் பகுதியைச் சேர்ந்த கனிராஜன், சின்னகோவிலாங்குளம் பகுதியைச் சேர்ந்த செந்தூர் பாண்டியன் ஆகிய இருவர் மீது மோதிய விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் இது குறித்து சின்னகோவிலாங்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி