செத்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டேன் என துரை வைகோ திமுக மூத்த தலைவர்கள் முன்னிலையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் திமுக, மதிமுக தொண்டர்கள் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து துரை வைகோ கூறும்போது, அப்படி எந்த மனக்கசப்பும் ஏற்படவில்லை. அப்படி பேசியது உணர்வுகள், உணர்ச்சிகளின் வெளிப்பாடு. மனிதர்களிடம் இது இயல்பானது என்று தெரிவித்தார். திமுக கூட்டணியில் உள்ள மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது.