கடையநல்லூா் அருகே நகை, பணம் திருடியவா் கைது

65பார்த்தது
கடையநல்லூா் அருகே நகை, பணம் திருடியவா் கைது
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாவடிக்கால் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சங்கா்கணேசன். அரிசி வியாபாரம் செய்து வருகிறாா். இவரது வீட்டின் மாடி வழியாக கீழ் தளத்திலுள்ள அறைக்குள் இறங்கிய மா்ம நபா் வீட்டிலிருந்த பணம், நகையை திருடிச் சென்றது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்ததாம்.

புகாரின் பேரில் கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்டதாக இக்பால்நகரைச் சோ்ந்த புரோஸ்கானை(22) கைது செய்தனா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி