நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (
டிசிஎஸ்) மற்றொரு மைல்கல்லை கடந்துள்ளது. ஐரோப்பா உதவி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக
டிசிஎஸ் பங்குச் சந்தைகளுக்குத் தெரிவித்ததை அடுத்து, இன்று நிறுவனத்தின் பங்குகள் நான்கு சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது. பிஎஸ்இயில்
டிசிஎஸ் பங்கு ரூ.4,135.9 என்ற அனைத்து கால சாதனையையும் எட்டியது. அதன் மூலம்
டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.15 லட்சம் கோடியைத் தாண்டியது.