நாய்க்கு வளைகாப்பு.. ஊருக்கே அறுசுவை விருந்து

560பார்த்தது
நாய்க்கு வளைகாப்பு.. ஊருக்கே அறுசுவை விருந்து
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சென்னப்பள்ளி ஊராட்சியில் கூராக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாராயணன் - ராதா தம்பதி. இவர்கள் தங்கள் வீட்டில் நாய் ஒன்றைச் செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். இந்த நாய் கார்ப்பமானதை அறிந்த குடும்பத்தினர், அதற்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் நாய்க்கு புத்தாடை, வளையல், பூ வைத்து வளைகாப்பு கொண்டாடியுள்ளனர். மேலும் இந்த வளைகாப்பு விழாவிற்கு வந்து சிறப்பித்த கிராமத்தினருக்கு சிக்கன் பிரியாணி வழங்கி அசத்தியிருக்கின்றனர் அந்த தம்பதி.

தொடர்புடைய செய்தி