"மெட்டிஒலி" இரண்டாம் பாகம்.. வெளியானது அறிவிப்பு

62653பார்த்தது
"மெட்டிஒலி" இரண்டாம் பாகம்.. வெளியானது அறிவிப்பு
காலங்கள் மாறினாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் 'மெட்டி ஒலி'. குடும்ப கதையை மையமாக வைத்தும் 5 அக்கா தங்கைகளின் பாசத்தை மையப்படுத்தியும் இந்த தொடர் எடுக்கப்பட்டிருந்தது. இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் சுமார் 3 ஆண்டுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பானது. இதனையடுத்து இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்னும் இரண்டு மாதத்தில், இந்த சீரியலின் ஷூட்டிங் துவங்கப்பட உள்ளதாகவும், இதற்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி