மக்களவையில் வாக்குவாதம் - எம்.பி., விளக்கம்

72பார்த்தது
மக்களவையில் வாக்குவாதம் - எம்.பி., விளக்கம்
மக்களவையில் தமிழக எம்.பிகளுக்கும், பாஜகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி விளக்கமளித்துள்ளார். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிதி வழங்காதது தொடர்பான நீலகிரி எம்.பி ஆ.ராசா அவர்களின் கேள்விக்கு அமைச்சர் சரியாக பதிலளிக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிதி தராமல் துரோகம் செய்வதை மறைக்கவே பாஜக சாதியை அவமதித்து விட்டதாக நாடகம் ஆடுகிறது. நியாயமாகப் பார்த்தால்,தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்யும் பாஜகவை பாதுகாக்க முயன்ற மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு.முருகன் தான் தமிழ்நாட்டு மக்களை அவமதித்திருக்கிறார் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி