கிறிஸ்துமஸ் விருந்தில் துப்பாக்கிச்சூடு.. 12 பேர் பலி

59பார்த்தது
கிறிஸ்துமஸ் விருந்தில் துப்பாக்கிச்சூடு.. 12 பேர் பலி
மெக்சிகோவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள சால்வாடிரா நகரில் கிறிஸ்துமஸ் விழாவில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கிறிஸ்துமஸ் விழா முடிந்து வெளியே வந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது. அதே மாநிலத்தில், சலமன்கா நகரிலும் துப்பாக்கிச் சூடு நடந்தது. அங்கு நான்கு பேர் இறந்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி