விருதுநகர், மதுரை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

598பார்த்தது
விருதுநகர், மதுரை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் பலத்த இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மீட்பு பணிகளுக்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளதாகவும், மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி