“3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்” - ராமதாஸ்

69பார்த்தது
“3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்” - ராமதாஸ்
விழுப்புரம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.467 கோடியே 69 லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு ரூ.625 கோடிக்கு மது வணிகம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மதுவை இலக்கு வைத்து விற்பனை செய்வது வெட்கக்கேடானது. எனவே தீபாவளி பண்டிகை மற்றும் அதற்கு முன்னும், பின்னும் ஒரு நாள் என 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி