இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. அப்போது தேசிய கீதத்துடன் ஆளுநர் உரையை தொடங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். ஆனால் அதற்கு தமிழக அரசு மறுத்துள்ளது கண்டனத்திற்குரிய ஒன்றாகும் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். மேலும்
இது தான் ஜனநாயகமா? இப்படித்தான் மக்கள் போற்றும் சட்டப்பேரவை நடத்தப்பட வேண்டுமா?
தேசிய கீதத்தைப் புறக்கணித்து, கவர்னரை அவமதித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பு செய்வதுதான் இந்த போலி திராவிட மாடலா? என கேள்வியெழுப்பியுள்ளார்.