மலேசிய நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கும், தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் கடந்த தினம் சென்னை திரும்பிய நிலையில், விமான நிலையத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இந்த வாய்ப்பை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும்,
மலேசியத் தமிழ் மக்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.