விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பில் 'கூரன்' என்ற திரைப்படம் வெளியானது. படம் தொடர்பான நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சி. கலந்து கொண்ட போது அவரிடம், 'பைரவா' என்ற பெயரை நீங்கள் பயன்படுத்த காரணம் அது விஜய் நடித்த படத்தின் பெயர் என்பதாலா என கேள்வி கேட்கப்பட்டது. இதை கேட்டு கடுப்பான அவர், "இந்த படத்தை பற்றி மட்டும் கேளுங்கள், நாயை பைரவா என்று தான் சொல்வார்கள்” என்றார்.