மாணவர்கள் மத்தியில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, எதை படிக்க வேண்டும் என்பது குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை என உதகையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 1,500 மாணவர்கள் முனைவர் பட்டம் பெறுகின்றனர். அதில் 5% மாணவர்களே தரமானவர்களாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் திறமையானவர்கள். அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பார்கள். அவர்களை சரியான வழியில் வழிநடத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.